திருத்தெங்கூர்
(குறிப்பு : இந்த தலத்தில் ஈசனை இலக்குமியும் நவக்கிரகங்களும் வழிபட்டனர்.
திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம் மற்றும் நவக்கிரகங்கள் இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனடைந்தார்கள்.
(திருமகளும், நவக்கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது. )
இந்த பதிகத்தை படிக்கும் போது நவக்ரகங்களால் நல்லதே நடக்கும்.)
இறைவன் - ரஜதகீரிஸ்வரர், வெள்ளிமலைநாதர்.
இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.
திருத்தெங்கூர்
திருச்சிற்றம்பலம்
(குறிப்பு : இந்த தலத்தில் ஈசனை இலக்குமியும் நவக்கிரகங்களும் வழிபட்டனர்.
திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம் மற்றும் நவக்கிரகங்கள் இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனடைந்தார்கள்.
(திருமகளும், நவக்கிரகங்களும் பூஜித்த லிங்கங்கள் தனித்தனியாக உள்ளது. )
இந்த பதிகத்தை படிக்கும் போது நவக்ரகங்களால் நல்லதே நடக்கும்.)
இறைவன் - ரஜதகீரிஸ்வரர், வெள்ளிமலைநாதர்.
இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.
திருத்தெங்கூர்
திருச்சிற்றம்பலம்
1.
|
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
போற்ற, கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர் புரங்கள் இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு; எழில் சேர் விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
1
|
2.
|
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை
தீர்க்கும், கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு பிறையன்; பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
2
|
3.
|
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை
மழுவாள படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர், படர் புன் சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு தறுகண் விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
3
|
4.
|
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள்
பயப்பார்; கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி கண்டர் வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
4
|
5.
|
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால்
தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
5
|
6.
|
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி
அணி சுவண்டர்; எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த, சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
6
|
7.
|
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட
நின்றார்; முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து இலங்க, பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்; வெண்பொடிப்பூசி வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
7
|
8.
|
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்; தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர் விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
8
|
9.
|
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால் ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக் கருதும் வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே. |
9
|
10.
|
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர், சமணர், சொல்
தவிர, இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு ஒருகைக் கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக் கனன்று எழுந்த விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே! |
10
|
11.
|
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரை, கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல், பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. |
11
|