வெள்ளி, 14 நவம்பர், 2014

சொந்த வீடு கட்ட பாட வேண்டிய அருமையான திருப்புகழ் (5 வித வரம்களை ஒரே பாடல் படிப்பதன் மூலம் பெறலாம் )

 சொந்த வீடு கட்ட பாட வேண்டிய அருமையான திருப்புகழ் பெறலாம் 

சிறுவாபுரி 





அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... அருளாலே

அந்தரியொ டு உடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனும்   உமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள  அண்டர்மகள் மணவாளா
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.


ஒரே பாடல் மூலம் 5 பலன் தரும் திருப்புகழ் ..அருணகிரியார் பாடியுள்ளார் ..

மேலும் இப்பாடலில் மகிழ்மீற,மகிழ்கூர,மகிழ்வாக,மின்பமுற என்று 4 இடங்களில் மகிழ்ச்சி பற்றி பாடியிருப்பதால் இத் திருப்புகழ மகிழ்ச்சி திருப்புகழ் என்று அழைக்கப்படுகிறது ......

இத் திருப்புகழை  மனம் ஒன்றி  சிறுவை கோனே ! பாலசுப்ரமணிய பெருமானே ! என்று மனமுருகி பாடினால் ,
  • 1,இம்மையில் பெண்ணுக்கு திருமணம் 
  • 2,தொழில் வெற்றி 
  • 3,வீடு 
  • 4,செல்வம் 
  • 5,மோட்சம்


ஆகிய 5 வித பலன்களை சிறுவாபுரி முருகன் நமக்கு  அளிப்பார்.
   
மேலும் சிறுவாபுரி முருகனை நாம் நினைத்தா லே போதும்..இப்பாடலில் சந்ததமும் அடியார்கள்  சிந்தையது குடியான என்று கடைசி வரிகளில் நம் அருணகிரியார் பாடி இருக்கிறார் .
சிந்தையில் சிறுவை முருகனை  நினைத்தாலே போதுமாம்..... திருவண்ணமலையை எப்படி நினைக்க முக்தியோ  அதே போல் நம் சிறுவாபுரி முருகனும்.....

அனுதினமும்  இப்பாடல் படித்து முருகன் அருளைப் பெறுவோமாக!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...