திங்கள், 11 செப்டம்பர், 2023

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

 திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!


 திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறை 

 திருப்பேணுபெருந்துறை - தக்கராகம்

 

இறைவர்   : சிவானந்தேசுவரர், பிரணவேசுவரர்.

இறைவியார்    : மங்களாம்பிகை, மலையரசி.

                               

                 திருச்சிற்றம்பலம்


1. பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு

                                                             ஒன்று, பூண்டு,

செம்மாந்து, "ஐயம் பெய்க!" என்று சொல்லி, செய் தொழில்

                                                             பேணியோர்; செல்வர்;

அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம்

                                                             அமர்ந்த

பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

   

2. மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய,

சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த

தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.

   

3. செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி,

கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்

கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன,

பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.

   

4. நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து

புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,

நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,

மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.

   

5. பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய,

துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்;

அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்

மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.

   

6. எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை,

விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர்,

பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்

பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.

   

7. விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட, வேதம்

                                      ஆறு அங்கம்

பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல், பெரியோர் ஏத்தும் பெருமான்-

தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த

குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே.

   

8. பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை

மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும்

முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி

அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.

   

9. புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின்

உள் வாய் அல்லிமேல் உறைவானும், உணர்வு அரியான்; உமைகேள்வன்-

முள் வாய் தாளின் தாமரைமொட்டு இன்முகம் மலர, கயல் பாய,

கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.

   

10. குண்டும் தேரும், கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி

மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்!

தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்

வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே.

   

11. கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து

நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய

படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்

உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.


                    திருச்சிற்றம்பலம் 

 


குறிப்பு : பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.     பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டால் அதிலிருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. ஆகயினால் திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து நாற்பத்து எட்டு  நாட்கள் அபிஷேகம் செய்து இப்பதிகத்தை பாடி வழிபாடு  செய்து வந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை. கண்டிப்பாக கை மேல் பலன் நிச்சயம்...

திங்கள், 4 செப்டம்பர், 2023

இன்று செவ்வாய் கிழமை + சஷ்டி +கார்த்திகை நக்ஷத்ரம் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த பதிவு மற்றும் இன்றே இந்த பதிகத்தை பாட துவங்குங்கள் !!!!!!!!சத்ரு சம்ஹார வேல் பதிகம்!!!!!!!!!!கடன், வறுமை, ,உடற் பிணிகள், நீக்கி மன அமைதியுடன் வளமுடன் நலமுடன் வாழ பாட வேண்டிய பதிகம்

சத்ரு சம்ஹார வேல் பதிகம்!!!!!!!!!!கடன், வறுமை, உடற் பிணிகள், நீக்கி மன அமைதியுடன் வளமுடன் நலமுடன் வாழ பாட வேண்டிய பதிகம்...

பாலன் தேவராய ஸ்வாமிகள் அருளிய சத்ரு ஸம்ஹார வேல் பதிகம்......




இன்று செவ்வாய் கிழமை + சஷ்டி +கார்த்திகை நக்ஷத்ரம் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த பதிவு மற்றும் இன்றே இந்த பதிகத்தை பாட துவங்குங்கள் !!!!!!!!


"வேலும் மயிலும் சேவலும் துணை" !

     

சண்முகக் கடவுள் போற்றி !

சரவணத் துதித்தாய் போற்றி

கண்மணி முருகா போற்றி !

கார்த்திகை பாலா போற்றி !

தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !

விண்மதி வதன-வள்ளி வேலவா போற்றி ! போற்றி !


1.அப்பமுடன் அதிரசம் பொரிகடலை

துவரைவடை அமுதுசெய் இபமுகவனும்

ஆதி கேசவன் லட்சுமி திங்கள்

தினகரன் ஐராவதம் வாழ்கவே !

முப்பத்து முக்கோடி வானவர்கள்

இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க !

மூவரோடு கருட கந்தருவர் கிம்புருடரும்

முது மறைக்கிழவர் வாழ்க !

செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்

திரு மங்கலம் வாழ்கவே !

சித்தவித்யாதரர் கின்னரர்கள்

கனமான தேவதைகள் முழுதும் வாழ்க !

சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப

சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !


2.சித்தி சுந்தரி கௌரி அம்பிகை கிருபாநிதி

சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி

சுமங்கலி நிதம்பரி விடம்பரி

சிலாசுத விலாச விமலி

கொத்து திரிசூலி திரிகோணத்தி

ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி

குலிச ஓம்காரி ரீங்காரி ஆங்காரி

ஓங்காரி ரீன்காரி அம்பா

முத்தி காந்தாமணி முக்-குண

சுந்தரி மூவர்க்கு முதல்வி

ஞான முதுமறைக் கலைவாணி அற்புத

புராதனி மூவுலகும் ஆனா ஜோதி

சக்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !


3.மூரியுள முப்பத்து முக்கோடி

தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி

முழு மந்தர கிரி தன்னை மத்தாகவே

செய்து முற்கணத்து அமுது பெறவே

கோரமுள வாசுகியின் ஆயிரம்

பகுவாயில் கொப்பளித்திடு விடங்கள்

கோளகையு மண்டலங்கள் யாவையும்

எரித்திடும் கொடிய வர வினைப் பிடித்து

வீரமுடன் வாயினாற் குத்தி உதிரம்

பரவ இரு தாளிலே மிதித்து விரித்துக்

கொழும் சிறகடித்தே எடுத்துதரும்

விதமான தோகை மயில்

சாரியாய் தினமேறி விளையாடி வரு முருக

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !


4.உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும்

உன்னுதற்கு அறிய சூரன்

உத்தி கொளும் அக்நிமுகன் பானுகோபன்

முதல் உத்தண்ட அசுரர் முடிகள்

நெக்கு விட கரி புரவி தேர்கள்

வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி

நிறையிலா வஸ்திரம் வெகு கோடிகள்

குருதி நீரில் சுழன்று உலவவே

தொக்கு தொகு திதி திதிமி டுண் டுடுடு

டகுகு டிகு துந்துமி தகு குதிதிகுதை தோத்தி

மிடங்கு குகு டிங்கு குகு

சங்குஎன தொந்தக் கவந்தம் ஆட

சக்ரமொடு சத்தி -விடு-தணிகை சென்னியில் வாழும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே !


5.அந்தியில் பேச்சி, உருமுனிக் காட்டேரி,

அடங்காத பகல் இரிசியும்,

அகோர-கண்டம், கோர-கண்ட-சூன்யம்,

பில்லி, அஷ்ட-மோகினி, பூதமும்,

சந்தியான வசுகுட்டி, சாத்தி ,

வேதாளமும், சாகினி, இடாகினிகளும்,

சாமுண்டி, பகவதி, ரத்தக்-காட்டேரி,

முதல் சஞ்சரித்திடு முனிகளும்,

சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறு காணவே

தீயிலிடும் மெழுகு போல

தேகமெல்லாம் கருகி, நீறாகவே நின்று

சென்னியிறு தணிகை மலையில்

சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே


6.கண்ட விட பித்தமும், வெப்பு, தலைவலி, வெடிப்பு,

இருமல், காமாலை, சூலை, குஷ்டம்,

கண்ட மாலைத், தொடை வாழை, வாய்ப்

புற்றினொடு, கடினமாம் பெரு வியாதி,

அண்டொணாதச் சுரம், சீத வாதச் சுரம் ,

ஆறாத பிளவை, குன்மம்

அடங்காத விறும்பஃது மேகமுடனால்

உலகத்தில் எண்ணாயிரம் பேர்

கொண்டதொரு நோய்களும் ‘வேல்’ என்று

உரைத்திடக் கோவென்ன ஓலமிட்டு

குலவு தினகரன் முன் மஞ்சு போல்

நீங்கிடும் குருபரன் நீறு அணிந்து

சண்ட மாருத கால உத்தண்ட கெம்பீர

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே


7.மக மேரு, உதயகிரி, அஸ்திகிரியும்,

சக்ரவாளக் கிரி , நிடத, விந்தம்,

மா உக்ர-தர நரசிம்மகிரி, அத்திகிரி

மலைகளோடு வதன சுமவா

ஜெகம் எடுத்திடு புட்ப தந்தம்,

அயிராவதம் , சீர் புண்டரீக் குமுதம்,

செப்பு சாருவ பூமி மஞ்சனம்,

சுப்பிர தீப வாமனம், ஆதி வாசுகி,

மகா பதுமன், ஆனந்த கார்க்கோடகன்,

சொற்-சங்க பால குளிகன் ,

தூய-தக்கன், பதும-சேடனோடு,

அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே

தக தகென நடனமிடு மயில் ஏறி விளையாடும்

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே


8.திங்கள் பிரமாதியரும், இந்திராதி தேவரும்,

தினகரரும், முனிவரோடு சித்திர புத்திரர், மௌலி அகலாமல்

இருபாதம் சேவித்து நின்று தொழவும்,

மங்கை திருவாணியும் , அயிராணியொடு,

சத்த மாதர் இரு தாள் பணியவும்,

மகாதேவர் செவி கூறப் பிரணவம் உரைத்திட

மலர்ந்த செவ்வாய்கள் ஆறும்,

கொங்கை, களபம், புணுகு, சவ்வாது

மணி வள்ளி , குமரி தெய்வானை-யுடனே

கோதண்ட பாணியும் , நான்முகனும்

புகழ் குலவு திருத்தணிகை மலை வாழ்

சங்கு சக்கரம் அணியும், பங்கயக் கரம் – குமர

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே


9.மண்டலம் பதினாலு லோகமும்

அசைந்திட , வாரிதி ஒரு ஏழும் வரள,

வலிய அசுரர் முடிகள் பொடி படக்

கிரவுஞ்ச மாரி எழத், தூளியாகக்

கொண்டன், இறமெனும் அசுரர் அண்டங்கள்

எங்குமே கூட்டமிட்டு ஏக ,

அன்னோர் குடல், கை, காலுடன், மூளை, தலைகள்

வெவ்-வேறு-ஆகக் குத்திப் பிளந்து எரிந்து

அண்டர்பணி கதிர்காமம், பழனி

சுப்பிரமணியம், ஆவினன்குடி யோகம்,

அருணாசலம், கயிலை, தணிகைமலை,

மீதில்-உரை ஆறுமுகப் பரம குருவாம்

சண்ட மாருத கால சம்மார அதி தீரா

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே


10.மச்சம் குதித்து நவமணி தழுவ

வந்த நதி வையாபுரி பொய்கையும்

மதிய முத்தம் செய்யும் பொற்கோபுரத்து

ஒளியும், வான் மேவு கோயில் அழகும்

உச்சிதமதான திரு ஆவினன் குடியில்

வாழ் உம்பரிட முடி நாயக

உக்ர மயில் ஏறி வரு முருக! சஹ(ர)வண பவ!

ஓம்கார சிற்சொரூப வேல் !

அச்சுத ! கிருபாகர ! ஆனை முறை

செய்யவே, ஆழியை விடுத்து, ஆனையை

அன்புடன் ரட்சித்த திருமால் ! முகுந்தன் !

எனும் அரி கிருஷ்ண ராமன் மருகன் !

சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த

சரஹ(வ)ணனை நம்பினவர் மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தி

எதிராடி விடும் சத்ரு சம்ஹார வேலே


"வேலும் மயிலும் சேவலும் துணை" !


குறிப்பு : பாலன்  தேவராய ஸ்வாமிகள் இயற்றிய இந்த சத்ரு ஸம்ஹர வேல் பதிகம் மிகவும் சக்திவாய்ந்தது. நம் உடற் பிணி, கடன், வறுமை,நீக்கி  மனநிம்மதியை நமக்கு கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த பதிகத்தை நாம் ஒரு மண்டலம் 48 நாட்கள் திருவிளக்கு முன்பு முருகப்பெருமானை நினைத்து 6 முறை படித்து வர நாம் வேண்டிய அத்துனை வரம்களும் நமக்கு கிடைக்க பெரும் என்பது உறுதி.

திங்கள், 3 ஜூலை, 2023

பேச இயலாதவர்கள் நன்கு பேசவும், திக்கு வாய் உள்ளவர்கள் நன்றாக பேசவும் பாட வேண்டிய பதிகம்!!!

 பேச இயலாதவர்கள் நன்கு பேசவும், திக்கு வாய் உள்ளவர்கள் நன்றாக பேசவும் பாட வேண்டிய பதிகம்!!!

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 3- ம் திருமுறை 

திருப்பெருவேளூர் - பஞ்சமம்


இறைவன் :  பிரியாநாதர் 

இறைவி : பாகம்பிரியாள் 


                             திருச்சிற்றம்பலம் 

1. அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்

விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்

கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த

பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.   1

 

2. கருமானின் உரி உடையர், கரிகாடர், இமவானார்

மருமானார், இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர்,

பொரு மான விடை ஊர்வது உடையார், வெண்பொடிப் பூசும்

பெருமானார், பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.      2

 

3. குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்

கணக்கு என்ன அருள் செய்வார், கழிந்தோர்க்கும்

                                            ஒழிந்தோர்க்கும்;

வணக்கம் செய் மனத்தாராய் வணங்காதார் தமக்கு என்றும்

பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      3

 

4. இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு

மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர்,

கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல்

பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      4

 

5. விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி;

குழையாதார், குழைவார் போல் குணம் நல்ல பல கூறி;

அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கு என்றும்

பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      5

 

6. விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச, விறல் வேழம்

உரித்தார், ஆம் உரி போர்த்து; மதில் மூன்றும் ஒரு

                                               கணையால்

எரித்தார் ஆம், இமைப்பு அளவில்; இமையோர்கள் தொழுது

                                                             இறைஞ்சப்

பெருத்தார்; எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      6

 

7. மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்; தமக்கு எல்லாம்

சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார், ஒரு கணையால்;

இறப்பு இலார்; பிணி இல்லார்; தமக்கு என்றும் கேடு இலார்

பிறப்பு இலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      7

 

8. எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக் கோன்தனை வீழ,

முரி ஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்து, உகந்த முதலாளா

வரி ஆர் வெஞ்சிலை பிடித்து, மடவாளை ஒரு பாகம்

பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.     8

 

9. சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு எய்தி,

காண் இயல்பை அறிவு இலராய், கனல் வண்ணர் அடி

                                                      இணைக்கீழ்

நாணி அவர் தொழுது ஏத்த, நாணாமே அருள் செய்து

பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      9

 

10. புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்

சொல்-தேற வேண்டா, நீர்! தொழுமின்கள், சுடர் வண்ணம்!

மல்-தேரும் பரிமாவும் மதகளிரும் இவை ஒழிய,

பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.      10

 

11. பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி,

அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்

நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான-

சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.  11


                                 திருச்சிற்றம்பலம் 

 


பழைய வினைகள், தொடரும் வல்வினை, அத்தனையும் தீர திருவாரூர் பெருமான் திருவடியை சரண் புகுந்து இந்த பதிகம் பாடுவோமாக !!!

 பழைய வினைகள், தொடரும் வல்வினை, அத்தனையும் தீர திருவாரூர் பெருமான்  திருவடியை சரண் புகுந்து இந்த பதிகம் பாடுவோமாக !!!


சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7 ம் திருமுறை 

திருஆரூர்

புறநீர்மை


                            திருச்சிற்றம்பலம் 

1.அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,

முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,

சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,

எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?

 

2. நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்

துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து,

தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு,

என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?

 

3. முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்

பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய,

செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,

என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?

 

4. நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக்

கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய,

செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,

எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?

 

5. கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்;

சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய்

அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு-

இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?

 

6 . சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம்,

வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள்

ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு-

ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே;

 

7. கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த

வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச்

செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு-

என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே?

 

8. ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப்

பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,-

சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு-

ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே?

 

9. மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல்

அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்-

திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு-

எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?


10. மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை

நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன்

பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார்

பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.

                        திருச்சிற்றம்பலம் 

 

திங்கள், 13 மார்ச், 2023

வினைகளை தீர்த்து முருகனருள் பெற பாட வேண்டிய திருப்புகழ்

 வினைகளை தீர்த்து முருகனருள் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

பொதுப்பாடல்கள் 

"வேலும் மயிலும் சேவலும் துணை"

நாலி ரண்டித ழாலே கோலிய
     ஞால முண்டக மேலே தானிள
          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே

ஞால முண்டபி ராணா தாரனும்
     யோக மந்திர மூலா தாரனு
          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக

மேலி ருந்தகி ரீடா பீடமு
     நூல றிந்தம ணீமா மாடமு
          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக

வீசி நின்றுள தூபா தீபவி
     சால மண்டப மீதே யேறிய
          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்

ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிய
          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவ
          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரச பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி

காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"

திங்கள், 13 பிப்ரவரி, 2023

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி கண் பார்வை தெளிவாக பெற பாட வேண்டிய பதிகம் ...

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி கண் பார்வை தெளிவாக பெற பாட வேண்டிய பதிகம்...

திருக்கண்ணார்கோயில் - குறிஞ்சி

இறைவர் திருப்பெயர்: கண்ணாயிரமுடையார்,                    கண்ணாயிரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: முருகுவளர்கோதை.
 
திருச்சிற்றம்பலம் 

1.தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.
   
2.கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும்,
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி,
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.
   
3.“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம்” என்பர்
கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி,
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.
   
4.தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்,
மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.
   
5.மறு மாண் உரு ஆய் மற்று இணை இன்றி, வானோரைச்
செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன், தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே.
   
6.விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும்
கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை,
நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே.
   
7.“முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி,
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு” என்பர்
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே.
   
8.“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த,
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த
திருக்கண்ணார்” என்பார் சிவலோகம் சேர்வாரே.
   
9.செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.
   
10.தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும்
சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன்,
ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர்
ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே.
   
11.காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த
பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்-
நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்-
பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

 
திருச்சிற்றம்பலம் 

நாம் முருகனுடன் ஐக்கியமாக பாட வேண்டிய திருப்புகழ் - அருணகிரிநாதர்

நாம்  முருகனுடன் ஐக்கியமாக பாட வேண்டிய திருப்புகழ் - சுவாமி மலை 


அருணகிரிநாதர் அருளிய சுவாமி மலை திருப்புகழ் 


"வேலும் மயிலும் சேவலும் துணை"

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து,

     நாலாறு நாலு பற்று ...... வகையான


நால் ஆறும் ஆகமத்தின் நூல்ஆய ஞான முத்தி

     நாள்தோறும் நான் உரைத்த ...... நெறியாக,


நீ வேறு எனாது இருக்க, நான்வேறு எனாது இருக்க

     நேராக வாழ்வதற்கு ...... உன்அருள்கூர,


நீடுஆர் ஷட ஆதரத்தின் மீதே பரா பரத்தை

     நீ காண் எனா அனைச் சொல் ...... அருள்வாயே.


சே ஏறும் ஈசர் சுற்ற, மாஞான போத புத்தி

     சீர் ஆகவே உரைத்த ...... குருநாதா!


தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

     தீரா! குகா! குறத்தி ...... மணவாளா!


காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த

     கா ஆர் சுவாமி வெற்பின் ...... முருகோனே!


கார்போலும் மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...