திங்கள், 13 பிப்ரவரி, 2023

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி கண் பார்வை தெளிவாக பெற பாட வேண்டிய பதிகம் ...

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி கண் பார்வை தெளிவாக பெற பாட வேண்டிய பதிகம்...

திருக்கண்ணார்கோயில் - குறிஞ்சி

இறைவர் திருப்பெயர்: கண்ணாயிரமுடையார்,                    கண்ணாயிரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: முருகுவளர்கோதை.
 
திருச்சிற்றம்பலம் 

1.தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.
   
2.கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும்,
வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி,
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு
செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.
   
3.“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம்” என்பர்
கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி,
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.
   
4.தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்,
மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு
உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.
   
5.மறு மாண் உரு ஆய் மற்று இணை இன்றி, வானோரைச்
செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன், தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே.
   
6.விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக
உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும்
கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை,
நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே.
   
7.“முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,
பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி,
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு” என்பர்
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே.
   
8.“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த,
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த
திருக்கண்ணார்” என்பார் சிவலோகம் சேர்வாரே.
   
9.செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.
   
10.தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும்
சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன்,
ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர்
ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே.
   
11.காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த
பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்-
நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்-
பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

 
திருச்சிற்றம்பலம் 

நாம் முருகனுடன் ஐக்கியமாக பாட வேண்டிய திருப்புகழ் - அருணகிரிநாதர்

நாம்  முருகனுடன் ஐக்கியமாக பாட வேண்டிய திருப்புகழ் - சுவாமி மலை 


அருணகிரிநாதர் அருளிய சுவாமி மலை திருப்புகழ் 


"வேலும் மயிலும் சேவலும் துணை"

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து,

     நாலாறு நாலு பற்று ...... வகையான


நால் ஆறும் ஆகமத்தின் நூல்ஆய ஞான முத்தி

     நாள்தோறும் நான் உரைத்த ...... நெறியாக,


நீ வேறு எனாது இருக்க, நான்வேறு எனாது இருக்க

     நேராக வாழ்வதற்கு ...... உன்அருள்கூர,


நீடுஆர் ஷட ஆதரத்தின் மீதே பரா பரத்தை

     நீ காண் எனா அனைச் சொல் ...... அருள்வாயே.


சே ஏறும் ஈசர் சுற்ற, மாஞான போத புத்தி

     சீர் ஆகவே உரைத்த ...... குருநாதா!


தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

     தீரா! குகா! குறத்தி ...... மணவாளா!


காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த

     கா ஆர் சுவாமி வெற்பின் ...... முருகோனே!


கார்போலும் மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


திங்கள், 6 பிப்ரவரி, 2023

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்து வாழ பாட வேண்டிய பதிகம்

 பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்து வாழ பாட வேண்டிய பதிகம்...

கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் கணவன் மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. திருவாஞ்சியத்தை காசியை விடப் பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் என குறிப்பிடத்தக்கதாக கூறப்படுகிறது.


சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7- ம் திருமுறை 

திருவாஞ்சியம்

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீவாஞ்சியநாதர்.

இறைவியார் திருப்பெயர்: வாழவந்தநாயகி, மங்களநாயகி


திருச்சிற்றம்பலம் 


1.பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு

மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;

திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்

ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.

 

2.தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்

செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,

கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்

மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே.

 

3.தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு நுனைப் பகழி அது ஒன்றால்,

பார்த்தனார் திரள் தோள் மேல் பல்-நுனைப் பகழிகள் பாய்ச்சி,

தீர்த்தம் ஆம் மலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்

சாத்து மா மணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே.

4.சள்ளை வெள்ளை அம் குருகுதான் அது ஆம் எனக் கருதி,

வள்ளை வெண் மலர் அஞ்சி, மறுகி, ஓர் வாளையின் வாயில்

துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்

வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர், தாமே.

 

5.மை கொள் கண்டர், எண்தோளர், மலை மகள் உடன் உறை வாழ்க்கைக்

கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்,

கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்,

பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?

 

6.கரந்தை கூவிள மாலை கடி மலர்க் கொன்றையும் சூடி,

பரந்த பாரிடம் சூழ, வருவர், எம் பரமர், தம் பரிசால்;

திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்

மருந்தனார், அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.

 

7.அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்,

குருவி ஆய் கிளி சேர்ப்ப, குருகு இனம் இரிதரு கிடங்கின்

பரு வரால் குதி கொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்

இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே.

 

8.களங்கள் ஆர் தரு கழனி அளி தரக் களி தரு வண்டு

உளங்கள் ஆர் கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி,

குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில், வாஞ்சியத்து அடிகள்

விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே.

 

9.வாழை இன் கனி தானும், மது விம்மி, வருக்கை இன் சுளையும்,

கூழை வானரம் தம்மில், “கூறு இது சிறிது” எனக் குழறி,

தாழை வாழை அம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்,

ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே.

 

10.செந்நெல் அங்கு அலங்(கு) கழனித் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்

இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறைகழல் பரவும்

பொன் அலங்கல் நல் மாடப் பொழில் அணி நாவல் ஆரூரன்

பன் அலங்கல் நல் மாலை பாடுமின், பத்தர் உளீரே!

  திருச்சிற்றம்பலம்


குறிப்பு : (தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.

இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.

மூவராலும் பாடல் பாடப்பட்ட சிறப்பு பெற்ற தலம் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இரண்டு உள்ளன

மேலும் பல சிறப்புகளையுடைய இத்தலம் திருக்கடவூருக்கு அடுத்தபடி நிகரற்ற தலமாகும்.)



புதன், 1 பிப்ரவரி, 2023

நாம் செல்லும் இடங்களெல்லாம் கந்தா!!! என்று அலைக்கும் போது செஞ்சேவலுடன் முருகனை காண!!!அருணகிரிநாதர் திருப்புகழ்...

நாம் செல்லும் இடங்களெல்லாம்  கந்தா!!! என்று அலைக்கும் போது செஞ்சேவலுடன் முருகனை காண!!!அருணகிரிநாதர் திருப்புகழ்...


திருச்செங்கோடு

"வேலும் மயிலும் சேவலும் துணை"

அன்பாக வந்து, உன்தாள் பணிந்து,

     ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல்,

அன்பால் மிகுந்து, நஞ்சுஆரு கண்கள்,

     அம்போருகங்கள் ...... முலைதானும்,

கொந்தே மிகுந்து வண்டு ஆடி நின்று

     கொண்டாடுகின்ற ...... குழலாரைக்

கொண்டே நினைந்து, மன் பேது மண்டி

     குன்றா மலைந்து ...... அலைவேனோ?

மன்றுஆடி தந்த மைந்தா! மிகுந்த

     வம்புஆர் கடம்பை ...... அணிவோனே!

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்

     வம்பே தொலைந்த ...... வடிவேலா!

சென்றே இடங்கள் கந்தா எனும் பொ

     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்.

செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த

     செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

குறிப்பு : (சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் ---

அடியேன் செல்லும் இடங்களில் எல்லாம் கந்தா!!!!! என்று அழைக்கும் போது செஞ்சேவல் கொண்டு வரவேணும்.) 



திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...