வியாழன், 15 ஆகஸ்ட், 2019

நினைத்தது நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ்

நினைத்தது நிறைவேற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருத்தணிகை திருப்புகழ் 


நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே

செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"


மனக்கவலை அடியோடு அகல பாட வேண்டிய திருப்புகழ்

மனக்கவலை அடியோடு அகல பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய சிதம்பரம் திருப்புகழ் 

நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
     நாயே னரற்றுமொழி ...... வினையாயின்

நாதா திருச்சபையி னேறாது சித்தமென
     நாலா வகைக்குமுன ...... தருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
     தோலா சனத்தியுமை ...... யருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
     தோழா கடப்பமல ...... ரணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
     மேராள் குறத்திதிரு ...... மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...