புதன், 24 ஏப்ரல், 2019

வேலை ஆட்களால் லாபம் பெற,நவக்ரஹ தோஷம் நீங்க, சுபிட்சங்கள் பல பெற பாட வேண்டிய பதிகம்

வேலை  ஆட்களால் லாபம் பெற,நவக்ரஹ தோஷம் நீங்க, சுபிட்சங்கள் பல பெற பாட வேண்டிய  பதிகம் 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7 ம் திருமுறை 

திருக்கோளிலி 

திருச்சிற்றம்பலம் 

1.நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; 
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, 
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .
 
2.வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! 
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! 
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! 
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
 
3.பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; 
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! 
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .

4.சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ 
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? 
கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
 
5.முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! 
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! 
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! 
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
 
6.குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! 
பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! 
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .

7.எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; 
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! 
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! 
அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .
 
8.அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! 
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; 
குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; 
இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

9.பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் 
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! 
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! 
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .
 
10.கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை 
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் 
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், 
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .

திருச்சிற்றம்பலம் 

தவநெறி வேண்டி பாட வேண்டிய பதிகம்

தவநெறி வேண்டி பாட வேண்டிய பதிகம் 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7 ம் திருமுறை 
(இப்பாடலை நாள்தோறும் பாடி வரும் அன்பர்களுக்கு தப்பாமல் தவநெறி கிட்டும் என்பது சுந்தரர் வாக்கு.)

திருத்துறையூர் 

திருச்சிற்றம்பலம் 

1.மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, 
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் 
தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே .
 
2.மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி, 
முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர் 
அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
3.கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச் 
செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால், 
மந்தி பல மா நடம் ஆடும், துறையூர் 
எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
4.அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி, 
சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர் 
விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
5.பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி, 
நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர் 
வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
6.மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி, 
மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச் 
சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
7.மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி, 
தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர் 
நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
8.கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி, 
செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர் 
ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
9.விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய, 
மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர் 
அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

10.மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும், 
ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்; 
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் 
தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

11.செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன், 
கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் 
பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார், 
மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .

திருச்சிற்றம்பலம் 
 

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

என் சம்பந்த பெருமானே முருகன்..முருகனே என் சம்பந்தன்..

என் சம்பந்த பெருமானே முருகன்..முருகனே என் சம்பந்தன்..

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்



என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி

இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி

அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான

அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே

                      முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி

                     முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித்

                     தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச்

                     சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

வறுமை ஒழிய பாட வேண்டிய திருப்புகழ்

வறுமை ஒழிய பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்


தோரண கனக வாசலில் முழவு
     தோல்முர சதிர ...... முதிராத

தோகையர் கவரி வீசவ யிரியர்
     தோள்வலி புகழ ...... மதகோப

வாரண ரதப தாகினி துரக
     மாதிர நிறைய ...... அரசாகி

வாழினும் வறுமை கூரினு நினது
     வார்கழ லொழிய ...... மொழியேனே

பூரண புவன காரண சவரி
     பூதர புளக ...... தனபார

பூஷண நிருதர் தூஷண விபுதர்
     பூபதி நகரி ...... குடியேற

ஆரண வனச ஈரிரு குடுமி
     ஆரியன் வெருவ ...... மயிலேறு

மாரிய பரம ஞானமு மழகு
     மாண்மையு முடைய ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

சிறந்த கல்வி ஞானம் பெற

சிறந்த கல்வி ஞானம் பெற 

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்


மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்

பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே

நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்

கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை "



திங்கள், 22 ஏப்ரல், 2019

(2)விநாயகர் அகவல்

சங்கடகர சதுர்த்தி நன்னாளில் சங்கரன் மகன் தாளிணைகளை பணிவோம்......

விநாயகர் அகவல் 


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் 

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் 

தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் 

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி 

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும்  ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில் 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

(1)ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

சங்கடகர சதுர்த்தி நன்னாளில் சங்கரன் மகன் தாளிணைகளை பணிவோம்......

ஸ்ரீ கணேஷபஞ்சரத்னம் 



முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் 
கலா தராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் 
அநாயகைக நாயகம் வினாஸி தேப தைத்யகம் 
நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம் 

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் 
 ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் தமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்  

ஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் 
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் 

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வநந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் 
ப்ரபஞ்சநாஸபீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்

நிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் 
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்
தமேக தந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் 

மஹா கணேஸ பஞ்சரத்ன மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம் 
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம்ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத் 

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

நினைத்த காரியம் தடங்கலின்றி இனிதே நடைபெற பாட வேண்டிய திருப்புகழ்

நினைத்த காரியம் தடங்கலின்றி இனிதே நடைபெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருகோணமலை திருப்புகழ் 


விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி

மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே

கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே

நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

அடைக்கலம் வேண்டி அனுதினமும் பாட வேண்டிய திருப்புகழ்

முருகனிடம் மனமுருகி பாடி அடைக்கலம் வேண்டி  அனுதினமும் பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருத்தணி திருப்புகழ் 



ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


"வேலும் மயிலும் சேவலும்  துணை"

எதிரிகளை அடங்க செய்து வெற்றியை நல்கும் பதிகம்!!!

எதிரிகளை அடங்க செய்து வெற்றியை நல்கும் பதிகம்!!!



மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் 
திருவுந்தியார் 

திருச்சிற்றம்பலம் 

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக் குந்தீபற.

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் று தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயேடி யந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்றே உந்தீபற.

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சிய வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கிநின் றுந்தீபற.

உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெல்லாம் உந்தீபற.

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

நான்மறை யோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இறுபதும் இற்றதென் றுந்தீபற.

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங்காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

திருச்சிற்றம்பலம் 
 

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மன அமைதி பெறவும்,பிறவா நிலை பெறவும் பாட வேண்டிய திருவாசகம்

மன அமைதி பெறவும்,பிறவா நிலை பெறவும் பாட வேண்டிய திருவாசகம் 

மாணிக்கவாசகர் அருளியது 


சிவபுராணம் 
 திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! 
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, 
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;

`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
 
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் 
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

 திருச்சிற்றம்பலம் 



   

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...