புதன், 10 ஜூலை, 2019

2.வறுமை நீங்கி செல்வ வளம் பெற பாட வேண்டிய திருப்புகழ்

2.வறுமை நீங்கி செல்வ வளம் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 



சுவாமிமலை

"வேலும் மயிலும் சேவலும் துணை"

வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்
     உருகிப் போனது தேற்றப்ப டாதினி
          மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென ...... அழையாயோ

வலியப் போய்உடல் கூச்சப்ப டாமையும்
     இடியப் பேசிய நாசிக்க லாமையும்
          மறுசொற் காதுகள் கேட்கப்ப டாமையும் ...... வரலாமோ

கறுவிப் பாய்புலி வேட்டைக்கு ளேவரு
     பசுவைப் போல்மிடி யாற்பட்ட பாடெழு
          கதையைப் பாரினி லார்க்குச்சொல் வேனினம் ...... அறியாயோ

கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர்
     தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே
          கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி ...... அலையாதே

குறைபட் டேஉயிர் காத்துக்கொள் வாயென
     முறையிட் டோர்கரி கூப்பிட்ட நாளொரு
          குரலிற் போய்உயிர் மீட்டுக்கொள் வோர்திரு ...... மருகோனே

குளிர்முத் தாலணி மூக்குத்தி யோடணி
     களபப் பூண்முகை பார்த்துப்பெண் மோகினி
          குவளைப் பார்வையில் மாட்டிக் கொளாதருள் ...... குருநாதா

நிறையத் தேன்விழு பூக்கொத்தி லேகனி
     கிழியத் தான்விழு காய்கொத்தி லேமயில்
          நடனக் கால்படு தோப்புக்கு ளேகயல் ...... வயலூடே

நதியைக் காவிரி யாற்றுக்கு ளேவரு
     வளமைச் சோழநன் நாட்டுக்கு ளேரக
          நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...