புதன், 20 ஜூலை, 2011

திருப்புகழ்

திருப்புகழமிர்தம் 

தேவாரம் போலவே திருப்புகழில் முருகபெருமான் அருணகிரியாருக்கு நிகழ்த்திய நிகழ்வு ஒன்றா , ரெண்டா, சொல்லவா வேண்டும்?
திருப்புகழிலும் முருகப்பெருமான் அருணகிரியார் மூலம் நமக்கு பக்தி நெறியை காட்டி முத்திக்கு வழி கூறுகிறார்....அதிலும் அடியேன் அறிந்த சில பாடல்களை வெளியிட விரும்புகிறேன்..அன்பர்கள் நாளும் ஓதி பலன் பெறுவோமாக !!!!!!!


திருப்புகழில் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு பெற

அருணகிரிநாதர்
                 
                               திருவேரகம்(சுவாமி மலை )

சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்

     தவமுறை தியானம் வைக்க                        -  அறியாத

சடகசட மூட மட்டி பவ வினையிலேசனித்த
   
    தமியன் மிடியால் மயக்கம்                          -   முருவேனோ

கருணைபுரியாதிருப்ப என குறையி வேலைசெப்பு
   
   கயிலை மலை நாதர் பெற்ற                       -   குமரோனே

கடக புய மீதி ரத்ன மணியணி பொன் மாலை செச்சை

    கமழு மண மார்கடப்ப                                   -   மணிவோனே

தருணமிதை யாமிகுத்த கனமதுரு நீள்சவுக்ய

     சகல செல்வ யோகமிக்க                           -  பெருவாழ்வு

தகைமை சிவ ஞான முத்தி பர கதியு நீகொடுத்து
    
    உதவி புரிய வேணு  நெய்த்த                       -  வடிவேலா

அருணதள பாத பத்ம மது நிதமு மேதுதித்த 

    அரிய தமிழ் தானளித்த                              -   மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழனி மலை மீதுதித்த

    அழக திருவேரகத்தின்                               -  முருகோனே
                        

"வேலும் மயிலும் துணை"


5 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ..

    சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
    தங்கள் புனிதப் பயணம் தொடரட்டும்..

    அந்த அம்மையப்பர் முன் நிற்கட்டும்.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  2. நண்பர் சொன்னது போல் சரியான ஆன்மீக பயணத்தில் சென்றுக்கொண்டிருக்குறீர்கள்... ஆன்மீகத்தை நாடி தொடர்ந்து வருகிறோம்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்,
    ஆகமக்கடல் எனும் எனது ஆன்மீக வலையை படித்து தங்கள் கருத்தை பகிரவும்
    http://aagamakadal.blogspot.comவணக்கம்,
    ஆகமக்கடல் எனும் எனது ஆன்மீக வலையை படித்து தங்கள் கருத்தை பகிரவும்
    http://aagamakadal.blogspot.com

    பதிலளிநீக்கு

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...