ஞாயிறு, 21 ஜனவரி, 2018

எல்லா வித ஆபத்துகளையும் நீக்கி ஈசன் அருளை பெற்று தரும் அற்புத பதிகம்

நமச்சிவாய பதிகம் - 1

அப்பர் பெருமான் அருளியது..
(குறிப்பாக  : சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன்சமண குருமார்களின் ஏவலால் திருநாவுக்கரசரை அழைத்துவரச்செய்தான்சமணர்களின் தூண்டுதலினால் அரசன் அவரைக் கொல்வதற்காக நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்இட்டான்அதில் அவர் பிழைத்தது கண்டு சமணர்கள் அவர்க்கு நஞ்சு கலந்த சோற்றை ஊட்டினர்அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லைஅவரை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தால் பட்டத்து யானையை ஏவினர்அதுவும் அவரைக் கொல்லாமல்,வணங்கி அகன்றதுஎப்படியேனும் கொன்றுவிடவேண்டும் என்று கருதித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் வீசினர்அச்சமயத்தில் திருநாவுக்கரசர்'சொற்றுணை வேதியன்என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடியருளினார்ஈசன் அருளால் அக்கல் கடலில் தெப்பம்போல் மிதந்து அவரைக் கரைசேர்த்தது.நாமும் அனுதினமும் இப்பதிகம் படிப்பதால் ஈசன் அருளால் எத்தகைய அச்சமும் ஆபத்தும் நீங்கி நலம் பெறலாம்.)

4ம் திருமுறை 

திருச்சிற்றம்பலம் 


1.சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

2.பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.


3.விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


4.இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.


5.வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.


6.சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.


7.வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.


8.இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


9.முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.


10.மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

திருச்சிற்றம்பலம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...