நரை,திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்ந்து சிவன் கழல் அடி சேர பாட வேண்டிய பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்
திருஉசாத்தானம் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
1.நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்,
போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;
கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்
சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே. 1
2.கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன்,
பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே. 2
3.தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி;
காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்;
சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே. 3
4.மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான்,
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ,
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே. 4
5.பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்
தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,
கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே. 7
6.மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர,
அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்;
திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே. 8
7.ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம்
சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே. 9
8.கானம் ஆர் வாழ்க்கையான், கார் அமண் தேரர் சொல்
ஊனமாக் கொண்டு, நீர் உரைமின், உய்ய எனில்
வானம் ஆர் மதில், அணி மாளிகை, வளர் பொழில்,
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே! 10
9.வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி மன்,
திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே. 11
திருச்சிற்றம்பலம்
(இப்பாடலில் 2 பாடல்கள் சிதைந்து போய்விட்டன )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக