வெள்ளி, 28 ஜூன், 2019

அருணகிரிநாதரின் - மயில் விருத்தம்(அனைத்து சகல யோகமும் பெற பாட வேண்டிய விருத்தம் )

அனைத்து சகல யோகமும் பெற பாட வேண்டிய விருத்தம் 

திரு அருணகிரிநாதரின் - மயில் விருத்தம்


குறிப்பு :(முருகப் பெருமானின் வாகனமான மயிலின் அழகும் ஆற்றலும் மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியது மயில் விருத்தம் ஆகும்.

முருகனின் வாகனம். பிரணவத்தின் தோற்றம். ''ஓம்'' மயில் தோகைவிரித்தாடும்போது உள்ள தோற்றம். உயிர்கள் அறிவை அறிய அநூகூலமாக உள்ள திருவருளின் வடிவாகும். விந்துசக்தியின் உருவே. உயரில் "யான், எனது" என்எம் திரிபு மறைந்திருப்பதால், பரம்பொருளாகிய முருகன் ஒவ்வொரு உள்ளத்திலும் அறியாதபடி மறைந்து தங்கி இருக்கிறார் (கள்ளனே இறைவன்). உயிரின் நல்வினை தீவினைக் கேற்ப உயிரை இயக்குகிறார். இந்த மறைந்திருக்கின்ற சக்தியே மயில் அல்லது திரோதன சக்தியாகும். பக்குவமடைந்தபின் இந்தத் திரை விலகும். திருவருட்சக்தி விளங்கும். ஞானப் பழம் பெற மயிலேறி உலகவலம் வந்தார். சிறுவாபுரியில் மரகத மயில். மயில் விருத்தம் பாடப் பெற்ற பெருமை.)

மேலும் அருணகிரிநாதர் தம் இறுதிப் பாடலில் எல்லா நாள்களிலும் ஒப்பற்ற சுனையில், இந்திரநீலம் என்ற நீலோர் பல மலர் விளங்குகின்ற திருத்தணி மலையில் வாழ்கின்ற, எங்கள் தலைவரும், இமையவர்களின் தலைவரு மாகிய முருகப்பெருமான் ஏறிவருகின்ற ஒப்பற்ற நம் தலைவனாகிய மயிலை, பலநாட்களாக திருவடியைப் போற்றிப் புகழ்கின்ற அருணகிரிநாதன் சொன்ன மிக இனிமையான அழகிய, பாடல்களாக விளங்குகின்ற, குற்றமில்லாத விருத்தங்கள் ஓருபத்தையும் பாராயணம் புரிபவர்கள், ஆதியான வேதநூல் தன்னிடத்தே நிலை பெற்ற, பிரமஎடைய நான்கு முகங்களையும் பெறுவர், அன்ன வாகனத்தின் மீது ஏறப்பெறுவர் கலைமகளைத் தழுவப் பெறுவர், ஜராவதம் என்ற யானையும் (இந்திரப்பதம்) பெறுவர் மகர மீன்களையுடைய கடலை இடமாகப்பெறுவர் (வருணபதம் பெறுவர்), கருட வாகனத்தில் ஏறுகின்ற வரம் பெறுவர்.அமுதத்தை உணவாகப் பெறுவர் பின்எம், ஆயிரம் பிறை தொழுகின்ற சதாபிசேகம் பெறுவர் செல்வங்கள் பெறுவர் புகழ் பெறுவர் அழியாத முக்தி நலமும் பெறுவார்கள் என்று அவரே உறுதி படக் கூறுகிறார்.

எனவே நாம் அனைவரும் இந்த  மயில் விருத்தத்தை அனுதினமும்  படித்து முருகப்பெருமான் மற்றும் மயிலின்   அருளை எளிதில் பெற்று இனிதே வாழ்வோம்.

"வேலும் மயிலும் சேவலும் துணை "

1.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா

சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.


2.சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
   பட்டுக் ரவுஞ்ச சயிலந்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
   தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
   சித்ரப் பதம்பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
   திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
   பத்மப் பதங் கமழ்தரும்

பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
   பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
   கந்தச்சுவாமி தணிகைக்

கல்லார கிரியுருக வருகிரண மரகத
   கலாபத்தில் இலகு மயிலே.

3.ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
   தண்டமுக டதுபெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
   கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
   மிக்கப் ரியப்படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
   விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
   மகீதரி கிராத குலிமா

மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
   வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
   பலகிரி அமர்ந்த பெருமாள்

படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
   பசுந்தோகை வாகை மயிலே.


4.யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
   உதித்ததென் றயன் அஞ்சவே

ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
   லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
   விசும்பிற் பறக்க விரிநீர்

வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
   வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
   கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
   நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
   முகிலுலவு நீலகிரிவாழ்

முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
   மூரிக் கலாப மயிலே.

5.சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
   நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
   சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
   யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
   அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
   நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
   நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
   மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
   வரமுதவு வாகை மயிலே.

6.சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
   சகல லோகமு நடுங்கச்

சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
   சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
   காரம் பிறந்திட நெடுங்

ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
   கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
   சித்ரப் பயோ தரகிரித்

தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
   திருத்தணிமகீரதன் இருங்

கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
   க்ருபாகரன் கார்த்தி கேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
   கிழிபட நடாவு மயிலே.

7.தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
   செகதலமு நின்று சுழலத்

திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
   தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
   பதைபதைத் தேநடுங்கப்

படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
   பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
   அமிர்தகல சக்கொங் கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
   மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
   குருதரு திருத்தணி கைவேள்

கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
   குடிபுகுத நடவு மயிலே.

8.செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
   சிந்தப் புராரி யமிர்தந்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
   தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
   சங்கார கோர நயனத்

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
   சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
   விருத்தன் திருத்த ணிகைவாழ்

வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
   வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
   சுவாமிவா கனமா னதோர்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
   துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

9.சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
   கிரியெனவும் ஆயிரமுகத்

தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
   திங்கள்சங் கெனவும்ப்ரபா

நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
   நின்றமா முகில் என்னவே

நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
   நீலக் கலாப மயிலாம்

அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
   அடியவர்கள் மிடிய கலவே

அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
   அலங்கற் குழாம் அசையவே

மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
   வல்லவுணர் மனம்அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
   வையாளி யேறு மயிலே.

10.நிராசத விராசத வரோதய பராபர
   னிராகுல னிராமய பிரா

னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
   நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
   குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய
   குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
   புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
   லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
   சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
   ஷடாநநன் நடாவு மயிலே.

11.எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
   திலங்கிய திருத்த ணிகைவாழ்

எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
   நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
   பகர்ந்தஅதி மதுர சித்ரப்

பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
   படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
   வாணிதழு வப்பெ றுவரால்

மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
   வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
   அமுதா சனம்பெ றுவர்மேல்

ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
   அழியா வரம்பெ றுவரே.

"வேலும் மயிலும் சேவலும் துணை "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...