ஞாயிறு, 14 ஜூலை, 2019

மனம் தெளிவு பெற்று தெளிந்த சிந்தனையுடன் இன்பமாக வாழவும்,இறுதியில் சிவலோகத்தை அடையவும் பாட வேண்டிய அப்பர் பெருமான் பதிகம்

மனம் தெளிவு பெற்று, தெளிந்த சிந்தனையுடன் இன்பமாக வாழவும்,இறுதியில் சிவலோகத்தை அடையவும் பாட வேண்டிய அப்பர் பெருமான் பதிகம் 

இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னகிரீஸ்வரர்.

இறைவி - வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி.



அப்பர் பெருமான் 

திருமருகல் 
திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

1.பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்; 
திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்; 
பருகல் ஆம், பரம் ஆயது ஓர் ஆனந்தம்- 
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

2.பாடம் கொள் பனுவல்-திறம் கற்றுப் போய், 
நாடு அங்கு உள்ளன தட்டிய நாண் இலீர்! 
மாடம் சூழ் மருகல் பெருமான் திரு 
வேடம் கைதொழ, வீடு எளிது ஆகுமே.

3.சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை- 
அனைத்தும் நீங்கி நின்று, ஆதரவு ஆய், மிக 
மனத்தினால் மருகல் பெருமான் திறம் 
நினைப்பினார்க்கு இல்லை, நீள் நில வாழ்க்கையே.

4.ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி, 
பாதுகாத்துப் பலபல கற்பித்து, 
மாதுதான், மருகல் பெருமானுக்குத் 
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

5.இன்ன ஆறு என்பது உண்டு அறியேன்; இன்று 
துன்னு கைவளை சோர, கண் நீர் மல்கும்; 
மன்னு தென் மருகல் பெருமான் திறம் 
உன்னி, ஒண்கொடி உள்ளம் உருகுமே.

6.சங்கு சோர, கலையும் சரியவே, 
மங்கைதான், மருகல் பெருமான் வரும் 
அங்கவீதி அருகு அணையா நிற்கும்; 
நங்கைமீர்! இதற்கு என் செய்கேன், நாளுமே?

7.காட்சி பெற்றிலள் ஆகிலும், காதலே 
மீட்சி ஒன்று அறியாது மிகுவதே? 
மாட்சி ஆர் மருகல் பெருமானுக்குத் 
தாட்சி சால உண்டாகும்!-என் தையலே.

9.நீடு நெஞ்சுள் நினைந்து, கண் நீர் மல்கும், 
ஓடும் மாலினோடு, ஒண் கொடிமாதராள், 
ழுமாடம் நீள் மருகல் பெருமான் வரில் 
கூடு, நீ!ழு என்று கூடல் இழைக்குமே.

10.கந்தவார் குழல் கட்டிலள், காரிகை 
அந்தி, மால் விடையோடும் அன்பு ஆய் மிக 
வந்திடாய், மருகல் பெருமான்!ழு என்று 
சிந்தைசெய்து திகைத்திடும்; காண்மினே!

11.ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று, 
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும் 
ஆதியான், மருகல் பெருமான், திறம் 
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

திருச்சிற்றம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...