புதன், 10 ஜூலை, 2019

எம பயம் நீக்கி முருகன் அருள் பெற பாட வேண்டிய திருப்புகழ்

எம பயம் நீக்கி முருகன் அருள் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

சுவாமிமலை



"வேலும் மயிலும் சேவலும் துணை"

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...