தேவாரத்தில் நம் சம்பந்தரால் இயற்றப்பட்ட இதிருப்பதிகத்தினை ஓதுவோர் கல்வி, செல்வம்,வெற்றி,புகழ் ஆகியவைகளை பெறலாம்..
இனமலி புகழ்மக ளிசைதர
திருவீழிமிழலை
திருச்சிற்றம்பலம்
1.தட நிலவிய மலை நிறுவி,
ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே. |
|
2.தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்; உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே. |
|
3.மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு, சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே. |
|
4.மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே. |
|
5.அணி பெறு வட மர நிழலினில்,
அமர்வொடும் அடி இணை
இருவர்கள் பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி, திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே. |
|
6.வசை அறு வலி வனசர உரு அது கொடு,
நினைவு அருதவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து, அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே. |
|
7.நலம் மலிதரு மறைமொழியொடு,
நதி உறுபுனல்,
புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி "திலகம் இது!" என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே. |
|
8.அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்; வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே. |
|
9.அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன்,
அளவிடல்
ஒழிய, ஒரு பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை, "சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே. |
|
10.இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி
சமண்விரகினர், திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே. |
|
11.சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை,
மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும் மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள், இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே. |
|
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக