உ
வழக்குகளில் வெற்றி பெறவும், செய்யும் தொழிலில் லாபம் பெறவும் ,மூத்த சகோதரர்கள் ஒற்றுமையாய் இருப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்
திருச்சிற்றம்பலம்
திருவீழிமிழலை
|
1.வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. |
|
|
2.இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. |
|
|
3.செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. |
|
|
4.நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. |
|
|
5.காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே. |
|
|
6.பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. |
|
|
7.மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. |
|
|
8.அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. |
|
|
9.அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. |
|
|
10.பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே. |
|
|
11.காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
திருச்சிற்றம்பலம் |
|
|
|
|
|
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக