ஞாயிறு, 2 டிசம்பர், 2018

4. தீராப்பிணி தீர - பேரூர் (அருணகிரிநாதர் திருப்புகழ் )

IV - தீராப்பிணி  தீர - பேரூர்  (அருணகிரிநாதர் திருப்புகழ் )

பேரூர்



தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான

ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே

பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே

பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும்,

சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச்
சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும்,

ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ... உலகெல்லாம் ஆட்சி
செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி
அருள்வாயாக.

பாரோர்க் கிறைசேயே ... உலகத்துக்கெல்லாம் தலைவராகிய
சிவபிரானின் குமாரனே,

பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம்
அரசனான குமரனே,

பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே,

பேரூர்ப் பெருமாளே. ... பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள
பெருமாளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...