திங்கள், 11 மார்ச், 2019

சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இடர் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய பதிகம் (ஆண், பெண் இரு பாலருக்கும்)

சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இடர் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய பதிகம் (ஆண், பெண் இரு பாலருக்கும்)

 திருமருகல்
திருஞானசம்பந்தர் தேவாரம் 

திருச்சிற்றம்பலம் 

1.சடையாய் எனும் ஆல்சரண் நீ எனும் ஆல்; விடையாய் எனும் ஆல்வெருவா விழும் ஆல்; மடை ஆர் குவளை மலரும் மருகல்
 உடையாய்தகுமோ இவள் உள் மெலிவே?

2.சிந்தாய் எனும் ஆல்சிவனே எனும் ஆல்; முந்தாய் எனும் ஆல்முதல்வா எனும் ஆல்; கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
 எந்தாய்தகுமோ இவள் ஏசறவே?

3.அறை ஆர் கழலும் அழல்-வாய் அரவும்
 பிறை ஆர் சடையும் உடையாய்பெரிய
 மறையார் மருகல் மகிழ்வாய்இவளை
 இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே.

4.ஒலி-நீர் சடையில் கரந்தாய்உலகம்
 பலி நீ திரிவாய்பழி இல் புகழாய்; மலி-நீர் மருகல் மகிழ்வாய்இவளை
 மெலி-நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.

5.துணி நீல-வண்ணம் முகில் தோன்றியன்ன
 மணி நீல-கண்டம் உடையாய்மருகல்
 கணி நீல-வண்டு ஆர் குழலாள் இவள்-தன்
 அணி நீல ஒண்-கண் அயர்வு ஆக்கினையே.

6.பலரும் பரவப் படுவாய்சடைமேல்
 மலரும் பிறை ஒன்று உடையாய்மருகல்
 புலரும் தனையும் துயிலாள்புடை-போந்து
 அலரும் படுமோ அடியாள் இவளே?

7.வழுவாள் "பெருமான் கழல் வாழ்கஎனா
 எழுவாள்நினைவாள் இரவும் பகலும்; மழுவாள் உடையாய்மருகல் பெருமான்; தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.


8.இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
 துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
 வலங்கொள்மதில் சூழ் மருகல் பெருமான்; அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.

9.எரி ஆர் சடையும் அடியும் இருவர்
 தெரியாதது ஒர் தீத்-திரள் ஆயவனே; மரியார் பிரியா மருகல் பெருமான்; அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.


10.அறிவு இல் சமணும் அலர்-சாக்கியரும்
 நெறி அல்லன செய்தனர்நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்மருகல் பெருமான்; நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே.

11.வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
 உயர்-ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
 இயல்-ஞான-சம்பந்தன பாடல் வல்லார்
 வியன்-ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.

திருச்சிற்றம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...