சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இடர் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற பாட வேண்டிய பதிகம் (ஆண், பெண் இரு பாலருக்கும்)
மறையார் மருகல் மகிழ்வாய்; இவளை
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே.
மெலி-நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.
திருமருகல்
திருஞானசம்பந்தர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
1.சடையாய் எனும் ஆல்; சரண் நீ எனும் ஆல்; விடையாய் எனும் ஆல்; வெருவா விழும் ஆல்; மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்; தகுமோ இவள் உள் மெலிவே?
உடையாய்; தகுமோ இவள் உள் மெலிவே?
2.சிந்தாய் எனும் ஆல்; சிவனே எனும் ஆல்; முந்தாய் எனும் ஆல்; முதல்வா எனும் ஆல்; கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்; தகுமோ இவள் ஏசறவே?
எந்தாய்; தகுமோ இவள் ஏசறவே?
3.அறை ஆர் கழலும் அழல்-வாய் அரவும்
பிறை ஆர் சடையும் உடையாய்; பெரியமறையார் மருகல் மகிழ்வாய்; இவளை
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே.
4.ஒலி-நீர் சடையில் கரந்தாய்; உலகம்
பலி நீ திரிவாய்; பழி இல் புகழாய்; மலி-நீர் மருகல் மகிழ்வாய்; இவளைமெலி-நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.
5.துணி நீல-வண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீல-கண்டம் உடையாய்; மருகல்
கணி நீல-வண்டு ஆர் குழலாள் இவள்-தன்
அணி நீல ஒண்-கண் அயர்வு ஆக்கினையே.
கணி நீல-வண்டு ஆர் குழலாள் இவள்-தன்
அணி நீல ஒண்-கண் அயர்வு ஆக்கினையே.
6.பலரும் பரவப் படுவாய்; சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய்; மருகல்
புலரும் தனையும் துயிலாள்; புடை-போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே?
புலரும் தனையும் துயிலாள்; புடை-போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே?
7.வழுவாள் "பெருமான் கழல் வாழ்க" எனா
எழுவாள்; நினைவாள் இரவும் பகலும்; மழுவாள் உடையாய்; மருகல் பெருமான்; தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.
8.இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள், மதில் சூழ் மருகல் பெருமான்; அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள், மதில் சூழ் மருகல் பெருமான்; அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.
9.எரி ஆர் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்-திரள் ஆயவனே; மரியார் பிரியா மருகல் பெருமான்; அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.
10.அறிவு இல் சமணும் அலர்-சாக்கியரும்
நெறி அல்லன செய்தனர், நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்; மருகல் பெருமான்; நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே.
நெறி அல்லன செய்தனர், நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்; மருகல் பெருமான்; நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே.
11.வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்-ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்-ஞான-சம்பந்தன பாடல் வல்லார்
வியன்-ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.
இயல்-ஞான-சம்பந்தன பாடல் வல்லார்
வியன்-ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக