ஞாயிறு, 24 மார்ச், 2019

வாகனம் வாங்கவும்,செல்வம் பெருகவும் பாட வேண்டிய திருப்புகழ்

வாகனம் வாங்கவும்,செல்வம் பெருகவும்   பாட வேண்டிய திருப்புகழ் 

கொங்கணகிரி




ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றி வளர்
     அந்திபகல் அற்ற நினைவு ...... அருள்வாயே.

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்திஉனை
     அன்பொடு துதிக்க மனம் ...... அருள்வாயே.

தங்கிய தவத்து உணர்வு தந்துடிமை முத்திபெற
     சந்திர வெளிக்கு வழி ...... அருள்வாயே.

தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்கவளர்
     சம்ப்ரம விதத்துடனெ ...... அருள்வாயே.

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம்
     உன்தனை நினைத்து அமைய ...... அருள்வாயே.

மண்டலிகர் ராப்பகலும் வந்து சுப ரட்சை புரி
     வந்து அணைய புத்தியினை ...... அருள்வாயே.

கொங்கில் உயிர் பெற்று வளர் தென்கரையில் அப்பர் அருள்
     கொண்டு, உடல் உற்ற பொருள் ...... அருள்வாயே.

குஞ்சர முகற்கு இளைய கந்தன்என, வெற்றிபெறு
     கொங்கண கிரிக்குள் வளர் ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...