மன அழுத்தம், டென்சன் போன்ற அனைத்து வித மன நோய்கள் தீரவும்,மனம் அமைதி பெற்று நிலையான சந்தோஷத்தில் இருக்கவும் பாட வேண்டிய பதிகம்
திருவலிவலம்
திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்
குறிப்பு : (மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என்று எத்தனையோ நன்மை-தீமைகளை அனுபவிக்கிறார்கள். மனித மனதிற்கு துன்பம் வரும்போது மனம் கனமாகிறது. அந்த மன அழுத்தத்தால் ‘ரத்த அழுத்தம்’, ‘இதய நோய்கள்’, ‘மாரடைப்பு’ போன்றவை ஏற்படுகிறது. இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும்.
ஆம்! அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன.
அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றன என்கிறார்கள் சிவ அன்பர்கள் ..மேலும் இப்பதிகத்தை உள்ளன்போடு அனுதினமும் பாடினால் மன நிம்மதி பெற்று இறை அருள் பெறுவது உறுதி..)
திருவலிவலம்
இறைவர் திருப்பெயர்: இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
திருச்சிற்றம்பலம்
1.பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.
2.இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.
3.உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே. உரை
4.அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.
5.பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.
6.தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.
7.நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.
8.இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.
9.தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.
10.இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே. உரை
11.மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.
திருச்சிற்றம்பலம்
திருவலிவலம்
திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்
குறிப்பு : (மனம் என்ற ஒன்று இருப்பதால்தான், நமக்கு மனிதன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த மனமுடைய மனிதர்கள் வாழ்வில் இன்ப, துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், கஷ்ட, நஷ்டங்கள் என்று எத்தனையோ நன்மை-தீமைகளை அனுபவிக்கிறார்கள். மனித மனதிற்கு துன்பம் வரும்போது மனம் கனமாகிறது. அந்த மன அழுத்தத்தால் ‘ரத்த அழுத்தம்’, ‘இதய நோய்கள்’, ‘மாரடைப்பு’ போன்றவை ஏற்படுகிறது. இன்று கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். அவர்கள் மனம் எப்போதும் இலகுவாக இருக்க எல்லாக் கவலைகளையும் விட்டொழிக்க வேண்டும்.
ஆம்! அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன.
அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றன என்கிறார்கள் சிவ அன்பர்கள் ..மேலும் இப்பதிகத்தை உள்ளன்போடு அனுதினமும் பாடினால் மன நிம்மதி பெற்று இறை அருள் பெறுவது உறுதி..)
திருவலிவலம்
இறைவர் திருப்பெயர்: இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
திருச்சிற்றம்பலம்
1.பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.
2.இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.
3.உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே. உரை
4.அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.
5.பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.
6.தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.
7.நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.
8.இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.
9.தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.
10.இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே. உரை
11.மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக