திங்கள், 13 பிப்ரவரி, 2023

நாம் முருகனுடன் ஐக்கியமாக பாட வேண்டிய திருப்புகழ் - அருணகிரிநாதர்

நாம்  முருகனுடன் ஐக்கியமாக பாட வேண்டிய திருப்புகழ் - சுவாமி மலை 


அருணகிரிநாதர் அருளிய சுவாமி மலை திருப்புகழ் 


"வேலும் மயிலும் சேவலும் துணை"

நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து,

     நாலாறு நாலு பற்று ...... வகையான


நால் ஆறும் ஆகமத்தின் நூல்ஆய ஞான முத்தி

     நாள்தோறும் நான் உரைத்த ...... நெறியாக,


நீ வேறு எனாது இருக்க, நான்வேறு எனாது இருக்க

     நேராக வாழ்வதற்கு ...... உன்அருள்கூர,


நீடுஆர் ஷட ஆதரத்தின் மீதே பரா பரத்தை

     நீ காண் எனா அனைச் சொல் ...... அருள்வாயே.


சே ஏறும் ஈசர் சுற்ற, மாஞான போத புத்தி

     சீர் ஆகவே உரைத்த ...... குருநாதா!


தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

     தீரா! குகா! குறத்தி ...... மணவாளா!


காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த

     கா ஆர் சுவாமி வெற்பின் ...... முருகோனே!


கார்போலும் மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...