திங்கள், 13 மார்ச், 2023

வினைகளை தீர்த்து முருகனருள் பெற பாட வேண்டிய திருப்புகழ்

 வினைகளை தீர்த்து முருகனருள் பெற பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

பொதுப்பாடல்கள் 

"வேலும் மயிலும் சேவலும் துணை"

நாலி ரண்டித ழாலே கோலிய
     ஞால முண்டக மேலே தானிள
          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே

ஞால முண்டபி ராணா தாரனும்
     யோக மந்திர மூலா தாரனு
          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக

மேலி ருந்தகி ரீடா பீடமு
     நூல றிந்தம ணீமா மாடமு
          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக

வீசி நின்றுள தூபா தீபவி
     சால மண்டப மீதே யேறிய
          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்

ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிய
          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவ
          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி

கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரச பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி

காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...