புதன், 24 ஏப்ரல், 2019

தவநெறி வேண்டி பாட வேண்டிய பதிகம்

தவநெறி வேண்டி பாட வேண்டிய பதிகம் 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிய 7 ம் திருமுறை 
(இப்பாடலை நாள்தோறும் பாடி வரும் அன்பர்களுக்கு தப்பாமல் தவநெறி கிட்டும் என்பது சுந்தரர் வாக்கு.)

திருத்துறையூர் 

திருச்சிற்றம்பலம் 

1.மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, 
குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் 
தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே .
 
2.மத்தம் மதயானையின் வெண் மருப்பு உந்தி, 
முத்தம் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
பத்தர் பயின்று ஏத்திப் பரவும், துறையூர் 
அத்தா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
3.கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்திச் 
செந்தண் புனல் வந்து இழி பெண்ணை வடபால், 
மந்தி பல மா நடம் ஆடும், துறையூர் 
எந்தாய்! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
4.அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி, 
சுரும்பு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
கரும்பு ஆர் மொழிக் கன்னியர் ஆடும், துறையூர் 
விரும்பா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
5.பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி, 
நாடு ஆர வந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும், துறையூர் 
வேடா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
6.மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி, 
மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச் 
சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
7.மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி, 
தாது ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும், துறையூர் 
நாதா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
8.கொய்யா மலர்க் கோங்கொடு வேங்கையும் சாடி, 
செய் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும், துறையூர் 
ஐயா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .
 
9.விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய, 
மண் ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், 
பண் ஆர் மொழிப் பாவையர் ஆடும், துறையூர் 
அண்ணா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

10.மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும், 
ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்; 
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் 
தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .

11.செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன், 
கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் 
பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார், 
மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .

திருச்சிற்றம்பலம் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...