செவ்வாய், 23 ஏப்ரல், 2019

வறுமை ஒழிய பாட வேண்டிய திருப்புகழ்

வறுமை ஒழிய பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்


தோரண கனக வாசலில் முழவு
     தோல்முர சதிர ...... முதிராத

தோகையர் கவரி வீசவ யிரியர்
     தோள்வலி புகழ ...... மதகோப

வாரண ரதப தாகினி துரக
     மாதிர நிறைய ...... அரசாகி

வாழினும் வறுமை கூரினு நினது
     வார்கழ லொழிய ...... மொழியேனே

பூரண புவன காரண சவரி
     பூதர புளக ...... தனபார

பூஷண நிருதர் தூஷண விபுதர்
     பூபதி நகரி ...... குடியேற

ஆரண வனச ஈரிரு குடுமி
     ஆரியன் வெருவ ...... மயிலேறு

மாரிய பரம ஞானமு மழகு
     மாண்மையு முடைய ...... பெருமாளே.

"வேலும் மயிலும் சேவலும் துணை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...