ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இந்த வருடம் அல்லாமல் இனி வருகின்ற அனைத்து வருடமும் நாம் சீரும் சிறப்பும் வாழ பாட வேண்டிய இந்த வருடத்தின் முதல் பதிகம் !!!!!!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023!!!!!!!!!!!!!!!

அன்பிற்கினியீர் சைவ சிவ அன்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.....

இந்த வருடம் அல்லாமல் இனி வருகின்ற அனைத்து வருடமும் நாம் சீரும் சிறப்பும் வாழ பாட வேண்டிய இந்த வருடத்தின் முதல் பதிகம் !!!!!!!

குறிப்பு : (இங்குள்ள இறைவனை செல்வத்தின் அதிபதியாகிய “திரு” என்ற மகாலட்சுமி பூஜித்து வழிபட்டுள்ளார். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் செல்வத்திற்கும், தம்பதி ஒற்றுமைக்கும் குறைவிருக்காது என்பது நம்பிக்கை.)

இறைவர் திருப்பெயர்: மகாலட்சுமீசர், லக்ஷிமிபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: லோகநாயகி.

திருநின்றியூர்

திருச்சிற்றம்பலம் 


1.சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.
   
2.அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே. உரை
   
3.பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்
உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!
   
4.பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!
   
5.குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,
அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.
   
6.மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!
   
7.பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.
   
8.நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
“அல்லர்” என, “ஆவர்” என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!
   
9.நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!
   
10.குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.

திருச்சிற்றம்பலம்

மேலும் சில குறிப்புகள் :

 (வழிபட்டோர் : இலக்குமி, பரசுராமர், அகத்தியர் இந்திரன், ஐராவதம், பசு, சோழ மன்னன்.
பாடியோர் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்.


இப்பதிக கடைசி வரியில் நம் சம்பந்தர் இப்பாடலை படிப்பதால் குறைவின்றி புகழ் கிடைக்கும் என்று கூறி இருக்கின்றார்.


"தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்".


எனவே மஹாலக்ஷ்மி அம்பாள் வழிபட்ட இத்தலத்து பதிகத்தை நாமும் அனுதினமும்  படித்து செல்வ வளமும் குறைவில்லா நிறை புகழும்  பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்!!!!!


சிவாயநம!!!~







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...