முருகப்பெருமான் நாம் செல்லும் இடமெல்லாம் நாம் அழைக்கும் போது நம் முன் வந்து நமக்கு அருள் கொடுக்கும் ஒரு அருமை வாய்ந்த திருப்புகழ்!!!!!
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
திருச்செங்கோடு
"வேலும் மயிலும் சேவலும் துணை "`
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள் ...... முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து ...... அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை ...... யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ...... வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
"வேலும் மயிலும் சேவலும் துணை "
குறிப்பு :
(சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ ... பல இடங்களுக்கும்
சென்று கந்தா என அழைக்கும்போது
செஞ்சேவல் கொண்டு வரவேணும் ... செவ்விய சேவலை ஏந்தி
என்முன் வரவேண்டும்.)
என்ற வரிகளில் காணலாம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக