செவ்வாய், 3 ஜனவரி, 2023

மனக்கவலை இல்லாமல் வாழ பாட வேண்டிய திருப்புகழ்

 மனக்கவலை இல்லாமல் வாழ பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

பழனி 


"வேலும் மயிலும் சேவலும் துணை"


மனக் கவலை ஏதும் இன்றி, உனக்கு அடிமையே புரிந்து,

     வகைக்கும் மநு நூல் விதங்கள் ...... தவறாதே,


வகைப்படி மனோ ரதங்கள் தொகைப்படியினால் இலங்கி,

     மயக்கம் அற, வேதமும் கொள் ...... பொருள்நாடி,


வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து, வகையால் நினைந்து,

     மிகுத்த பொருள் ஆகமங்கள் ...... முறையாலே,


வெகுட்சி தனையே துரந்து, களிப்பின் உடனே நடந்து,

     மிகுக்கும் உனையே வணங்க ...... வரவேணும்.


மனத்தில் வருவோனெ என்று, உன் அடைக்கலம் அதாக வந்து,

     மலர்ப்பதம் அதே பணிந்த ...... முநிவோர்கள்,


வரர்க்கும், இமையோர்கள் என்பர் தமக்கும், மனமே இரங்கி,

     மருட்டி வரு சூரை வென்ற ...... முனைவேலா!


தினைப்புனம் முனே நடந்து, குறக்கொடியையே மணந்து,

     செகத்தை முழுது ஆள வந்த ...... பெரியோனே!


செழித்த வளமே சிறந்த மலர்ப் பொழில்களே நிறைந்த,

     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...