ஞாயிறு, 8 ஜனவரி, 2023

சிறப்பான வாழ்கை வாழ பாட வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

 சிறப்பான வாழ்கை வாழ பாட வேண்டிய திருப்புகழ் 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 

"வேலும் மயிலும் சேவலும் துணை"

மதுரை

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த

     ஆறுமுக வித்த ...... கமரேசா


ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்

     ஆரணமு ரைத்த ...... குருநாதா


தானவர் குலத்தை வாள்கொடு துணித்த

     சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா


தாளிணைக ளுற்று மேவியப தத்தில்

     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே


வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்

     யாவரொரு வர்க்கு ...... மறியாத


மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க

     மாமயில் நடத்து ...... முருகோனே


தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி

     சேரமரு வுற்ற ...... திரள்தோளா


தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை

     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.


"வேலும் மயிலும் சேவலும் துணை"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய பதிகம்...இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம் இன்றைய நாளில் இந்த பதிவு படித்து பலன் பெறுவோமாக !!!!!!

  திக்குவாய் மற்றும் பேச இயலாத குழந்தைகள் சென்று வழிபட வேண்டிய தலம் மற்றும் பாட வேண்டிய  பதிகம்... இன்று செவ்வாய் கிழமை + பிரதோஷம்... இன்றைய...